Monday, August 25, 2008

அருள்மிகு ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி திருக்கோவில்

திருவுக்கும் திருவாகிய செல்வனாகிய மாலவன் மகிழ்ந்து இனிதுறையும் திருத்தலங்களுள் ஒன்று நெல்லை மாவட்டம்,தென்காசி வட்டத்தில் இருக்கும் மேலப்பாவூர் கிராமம்.

ஆலயத்தின் மூலவரின் திருநாமம் “அழகிய மன்னார்”; கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம்; சுதைச் சிற்பம்; ஸ்ரீ தேவியும், பூதேவியும் இரு
மருங்கிலும் திகழ்கின்றனர்; பிருகு முனிவரும், மார்க்கண்டேயரும் வழிபட்ட திருத்தலம்.

அழகிய திராவிட பாணியில் அமைந்துள்ள இந்த ஆலயம் தென்காசிப் பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்தது. கல்வெட்டுக் குறிப்புகளின்படி இந்த ஆலயம் கி.பி 1545 ல் ஜடில வர்மன் என்ற பராக்ரம பாண்டியனால் புனரமைக்கப் பட்டது . இம்மன்னன் அபிராம பராக்ரம பாண்டியனின் புதல்வனாவான். ஆலயத்தினுள் காணப்படும் இரு கல்வெட்டுகள் இவற்றை அறிந்துகொள்ள உதவுகின்றன.
இத்தகவல்களை உறுதி செய்து சான்றிதழ் அளித்திருப்பவர் –

Dr. M.D.Sampath, M.A., Ph.D.
Director of எபிக்ரப்தி
MYSORE – 570 017

அன்பர்கள் பெருமுயற்சி செய்து சுதை வேலைகளை நிறைவேற்றியுள்ளனர். இதுகாறும் ரூ.5 லக்ஷம் மதிப்பிலான பணிகள் நிறைவேறியுள்ளன. திருமதில், தளவரிசை, ஆழ்துழாய்க்கிணறு, கொடிமரம், மஹா ஸம்ப்ரோக்ஷணம் போன்ற செலவுகளுக்கும், நிரந்தர வைப்பு நிதிக்குமாக ரூ.20 லக்ஷம் தேவைப் படுகிறது. 80-G வரிச்சலுகை புதுப்பிக்கப்பட உள்ளது. அன்பர்கள் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு பணிவுடன் அழைக்கிறோம்.

திருப்பணிக்குழுப் பொறுப்பாளர்கள் –

திரு.D.ராமகிருஷ்ணன்
49/103 B, தெற்கு மாசி வீதி
தென்காசி – ௬௨௭ 805
திரு. P. வேங்கடராமன்
66, அக்ரஹாரம்
மேலகரம் – 627 818

வங்கிக் கணக்கு எண் –
S.B A/C No.15055 I.O.B TENKASI BR.
S.B A/c No.609001001101 Sri Ramabajana Sabha Melappavur Br.

மின்னஞ்சல் தொடர்பு – R.தேவராஜன்/சென்னை
rdev97@gmail.com

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home